Ad Widget

மின்சார சபையின் புதிய கட்டடம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பதில் பொதுமுகாமையாளர் அலுவலகத்துக்கான புதிய ஐந்து மாடிக் கட்டடம் நேற்று திங்கள்கிழமை பகல் மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரண்வக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சந்தியில் இருந்து பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலய மாணவர்களின் கீழைத்தேய வாத்திய நடனக் குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் எரிபொருள் மின்சக்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார வடமாகாண ஆளுநர் பளிகக்கார உட்பட மின்சார சபையின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

தேசியக் கொடியை எரிபொருள் மின்சக்தி அமைச்சர் ஏற்றி வைக்க மின்சார சபைக் கொடியை இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார ஏற்ற வட மாகாண கொடியை வட மாகாண ஆளுநர் ஏற்றி வைத்தார் மின்சார சபையின் கீதம் பாடப்பட்டதைத் தொடர்ந்து நினைவு பெயர்ப்பலகை அமைச்சரினால் திரை நீக்கம் செய்யப்பட்டு புதிய கட்டடத்தையும் நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

Related Posts