Ad Widget

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

dead-footஇன்று திங்கட்கிழமை குடாநாட்டில் இடம்பெற்ற இரண்டு மின்சாரத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.

பருத்தித்துறை பன்னைக்கட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மின்சாரம் தாக்கி ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பருத்தித்துறை, கொட்டடி, கடற்கரை வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் ஜெயரத்தினசீலன் (வயது – 52) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

வீடு ஒன்றில் மின்னிணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த சமயமே இவர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானார் என்று கூறப்படுகின்றது. இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்ஸ்ண்ட் தாயான் மரணவிசாரணைகளை நடத்தி பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதேசமயம், கோண்டாவிலில் மின்சாரத்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியானார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த திரவியநாதன்-ரனிஸ்ரன் (வயது – 26) என்பரே அங்கு மரணமானவராவார்.

ஆலயத்தில் ஓவிய வேலையில் ஈடுபட்டுக் கொணடிருந்த வேளையிலேயே இவர் மின்சாரத்தாக்கத்திற்கு இலக்காகி மரணமானார் என்று கூறப்பட்டது. கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது.

Related Posts