Ad Widget

மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்

powercutவீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும்
04.05.2013 சனிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், நவாலி, தாவடி, சுதுமலை, ஆனைக்கோட்டை, சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன், அச்செழு, புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, அச்சுவேலி, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களிலும்

05.05.2013 ஞாயிற்றுக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் கல்வியன்காடு, நல்லூர், அரியாலை, செம்மணி, பரமேஸ்வரா சந்தி, பலாலி வீதி, விஞ்ஞானபீடப் பிரதேசம், அரசடி வீதி, கொழும்புத்துறை வீதி, வைமன் வீதி, கோவில் வீதி, றக்கா வீதி, இராசாவின்தோட்டம், பழைய பூங்கா, அத்தியடி புது வீதி, சோமசந்தரம் அவனியூ, முலவைச் சந்தி, ஆஸ்பத்திரி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கச்சேரியடி, புங்கன்குளம், ஈச்சமோட்டை, பாசையூர், குருநகர், கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படிப் பிரதேசம், கொன்வென்ட் பிரதேசம், பிரதான வீதி, மந்திகை, புலோலி, புற்றளை, சாரையடி, ஓராம் கட்டை, தம்பசிட்டி, பருத்தித்துறை நகரப் பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி ஆகிய இடங்களிலும்

மேலும் இதே நாள் சுன்னாகம் மத்திய மின்நிலையத்தில் அவசர திருத்தவேலைகள் செய்யவேண்டியிருப்பதால் யாழ் குடாநாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை 08.00மணியிலிருந்து 10.00மணிவரையான இரண்டு மணிநேரத்திற்கு மின்தடை அமுல்படுத்தப்படும்

07.05.2013 செவ்வாய்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் அச்சுவேலி இடைக்காடு, பத்தமேனி, வளலாய், தொண்டமனாறு வீதிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

Related Posts