Ad Widget

மினிபஸ் மதிலுடன் மோதி விபத்து , 20க்கும் மேற்பட்டவர்கள் காயம்

accidentயாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினிபஸ் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இவ்விபத்துச் சம்பவம் கோப்பாய் சந்தியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினிபஸ் சாரதியினால் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து சம்பவத்திற்க்கு சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு சென்றமையே காரணம் என பயணிகளில் சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Posts