Ad Widget

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லை!!

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறு கங்கேசன்துறைக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் தனது பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் மீளப்பெறப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை நீதிமன்றில் இருந்த வேளை பொலிஸ் உயர்மட்டத்திலிருந்து இந்த அறிவுறுத்தல் அவருக்குக் கிடைத்துள்ளது. அதனால் அறிவுறுத்தலை வல்வெட்டித்துறை, நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கிவிட்டு அவர் பருத்தித்துறை நீதிமன்றிலிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரி அச்சுவேலிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்க மறுத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பொலிஸாரல் முன்வைக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைகளின் கீழ் குற்றமிழைக்கப்பட்டால் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

Related Posts