1974 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் 5 ஆம் திகதி (நாளை) உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நினைவேந்தலில் சகல தமிழ் அரசியற் கட்சிகளினதும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.