Ad Widget

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Daklas-vicknes

இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல், அந்த அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகள் செய்தல், திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் (டக்ளஸ் தேவானந்தா) ஒருவருடன் இணைந்து முன்னெடுப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப்பதவி 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருக்கும்”.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts