Ad Widget

மாற்று வலுவுடைய மாணவிகள் துஷ்பிரயோகம் : அதிபருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைக்கு விளக்க மறியல்

மாற்று வலுவுடைய மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு துணையாக இருந்தார் எனக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியையை விளக்கமறியலில் வைக்க யாழ். சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதடி நவீல்ட் மாற்று வலுவுடையோருக்கான பாடசாலையில் கல்வி கற்ற 5 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் அதன் அதிபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

துஷ்பிரயோகத்துக்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட 32 வயதான குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு இருந்தார்.

நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட குறித்த ஆசிரியையை வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts