Ad Widget

மாரி புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் : தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள மாரி திரைப்படத்தை தடை செய்யக் கோரி நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மாரி திரைப்படம் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தே நேற்றய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வாறான திரைப்படங்களால் இளைஞர் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது தனுஷின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது ‘சிகரட் கம்பனியின் ஒப்பந்தத்திலிருந்து ஓய்வுபெற்றார் ரஜினி பொறுப்பேற்றார் தனுஷ்’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷமெழுப்பி தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts