Ad Widget

மானிப்பாய், சாவகச்சேரியில் வாள் வெட்டு 12பேர் வைத்தியசாலையில்

knife-bloodஉடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

இதனால் படுகாயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலரே வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எஸ்.சிவஞானமூர்த்தி (57), சி.தவனேஸ்வரி (45), சி.கிருஸ்ணகுமார் (23), திலக்ஷன் (15) மற்றும் என்.அன்னம்மா (74) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

சாவகச்சேரியில் இடம்பெற்ற மோதலில் பெண்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்து உள்ளனர்.

சாவகச்சேரி நகரில் உள்ள மது பானசாலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, நண்பர்கள் குழு இடையே மாலை 3 00 மணி அளவில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம், அடிதடியாக மாறியது.

இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக மாலை 5.30 மணி அளவில் காயம் அடைந்தவரின் நண்பர்கள் கச்சாய் முருகமூர்த்தி கோவிலடிக்குச் சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் பெண்கள் உட்பட ஜவர் காயமடைந்தனர்.

ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

பாலச்சந்திரன் கஜன்(30), அருனந்தி குகதாஸ்(33), சொக்கலிங்கம் கஜன்(23), செல்வராசா அரவிந்தன்(30), உதயச்சந்திரிக்கா (58), பாலசுப்பிரமணியம் செல்வரஞ்சன்(29) ஆகியோரே காயமடைந்தவர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts