Ad Widget

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்! அச்சத்தில் மக்கள்!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது. அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எவரும் நேற்று மாலைவரை கைது செய்யப்படவில்லை.

மானிப்பாய் நவாலி சந்தை வீதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்த பொருள்களை அடித்து நாசம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

வீட்டிலுள்ளவர்கள் அச்சத்தில் அறைக்குள் ஒழிந்துகொண்டுள்ளனர். சத்தமிட்ட கும்பல் அங்கிருந்த பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளுக்கும் தீயிட்டு கொழுத்திவிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரத்தில் வாள்வெட்டுக் கும்பலால் நடத்தப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். மூன்று சம்பவங்களும் சுமார் 200 மீற்றர் தூரத்துக்குள் இடம்பெற்றுள்ளன.

முறைப்பாடுகளுக்கு அமைவாக சம்பவ இடங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதும் நேற்றயதினம் மாலைவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts