Ad Widget

மாணவிகளுக்கு இடையூறு விளைவித்த 23 இளைஞர்கள் கைது

நெல்லியடி பகுதியில் வீதிகளில் நின்றுகொண்டு பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுவரும் மாணவிகளிடம் சேஷ்டை செய்த 23 இளைஞர்களைக் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜஃவ்பர் தெரிவித்தார்.

பின்னர், கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இளைஞர்களை கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா உத்தரவிட்டிருந்தமைக்கமைய மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த 23 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts