Ad Widget

மாணவனுடன் தவறாக நடந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனுடன் தவறாக நடந்ததாகவும், தாக்கியதாகவுமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பபில் மேலும் தெரியவருவதாவது

தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுடன் குறித்த ஆசிரியர் தவறாக நடந்ததாகவும், மாணவனை தாக்கியதாக பாடசாலை நிர்வாகம் கிளிநொச்சி சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு முறையிட்டதனை தொடர்ந்து சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் விடயத்தை பொலீஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலீஸார் ஆசிரியரை கைது செய்து வியாழக்கிழமை நீதி மன்றில் முற்படுத்தினார்கள் இதன்போதே அவருக்கு நீதிமன்றம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவு பிறப்பித்தது.

அத்தோடு மாணவன் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts