Ad Widget

மாணவனின் அந்தரங்க உறுப்பில் உதைத்த ஆசிரியருக்கு பிணை

வரணி மத்திய கல்லூரியில் தரம் 10இல் கல்விகற்கும் மாணவனை காலால் உதைத்து அந்தரங்க உறுப்பை காயப்படுத்திய ஆசிரியரை 1 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (17) அனுமதியளித்தார்.

மாணவர் பிழை செய்யும் போது அதனை பெற்றோருக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது என ஆசிரியருக்கு நீதவான் எச்சரிக்கை செய்தார்.

கடந்த திங்கட்கிழமை (15) காலையில் மாணவர்கள் சிரமதானம் செய்யும் வேளையில் மேற்படி மாணவன் சிரமதானம் செய்யாமல் நின்றதை அவதானித்த ஆசிரியர் சப்பாத்து காலால் மாணவனை உதைத்துள்ளார்.

அது தவறுதலாக மாணவனின் அந்தரங்க உறுப்பில் பட்டு அதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் மாணவனின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆசிரியரை செவ்வாய்க்கிழமை (16) மாலை கைது செய்தனர்.

Related Posts