Ad Widget

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (13) மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய், சுதுமலையைச் சேர்ந்த மகாராசா துஷாந்தன் (வயது 20), ஸ்ரீகரன் ஸ்ரீசங்கர் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு ,வீடு செல்வதற்காக நீதிமன்றத்திலிருந்து வீதிக்கு செல்ல முற்பட்ட வேளை, அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த சிலர் இவர்களை வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts