Ad Widget

மருதனார்மட ஆலயத்தில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லீம்?

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2016 – 2017 காலப்பகுதியில் மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பிரதீப சர்மா என்ற பெயரில் பூஜை செய்தவர் கெக்கிராவையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முகமட் ஜெஃப்ரி என்றும் இனங்காணப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட j/190 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பிரஸ்தாப அர்ச்சகர் தனது குடும்ப பதிவை நீக்கி தருமாறும் தாம் தற்போது கெக்கிராவை சென்றுவிட்டதாகவும் குறித்த பகுதி கிராம சேவையாளர் இடம் தெரிவித்துள்ளார்.

பதிவை ரத்துச் செய்வதற்கான ஆவணங்கள் பரிசீலித்தபோது பிரதீப் சர்மாவின் பெயர் முகமட் ஜெஃப்ரி எனக் கண்டறிந்த கிராமசேவையாளர் அது தொடர்பில் உடுவில் பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

முஸ்லிம் இனத்தவர் ஒருவர் மருதனார்மடம் இராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பூசை செய்தார் என்ற தகவலால் அதிர்ந்துபோன உடுவில் பிரதேச செயலகம் சம்பந்தப்பட்ட தகவலை பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து புலனாய்வுத்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரதீப் சர்மா முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்தவர் என்றும் அதன் பொருட்டே அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்றும் இஸ்லாமிய மதத்தில் இருந்துகொண்டே சிவபூஜை செய்தார் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts