Ad Widget

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 100ஐ கடந்தது – கிளிநொச்சியிலும் தொற்று!

யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு கூடங்களிலும் 601 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில், யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 120 பேருக்கும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 481 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டுப் பேருக்கும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நூறைக் கடந்து 103ஆக அதிகரித்துள்ளது.

Related Posts