Ad Widget

மருதனார்மடத்தில் பிரபாகரனுக்கு வானைப் பிளந்த கரகோஷம்! – ஆச்சரியத்துடன் பார்த்த கண்காணிப்பாளர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மருதனார்மடத்தில் நடத்திய கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம், கூட்டத்தினர் பெரும் கரகோஷம் செய்து வரவேற்றனர்.

கூட்டமைப்பின் வேட்பாளர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் தவிசாளர் பிரகாஸ் ஆகியோர் உரையாற்றும் போது, எங்களின் போராட்டம் ஆயுத வழியில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு தற்போது அது நயவஞ்சமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எமது அரசியல் பயணத்தினை முன்னெடுத்து வருகின்றோம். எமது இனப்பிரச்சனை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து செல்லப்படுவதற்கு காரணம் விடுதலைப் புலிகள் இயக்கமே எனக் குறிப்பிட்டார்.

எமது மாபெரும் தேசியத் தலைவன் என்றும் எமது தலைவர் பிரபாகரனே என்றும் அவர் குறிப்பிட்ட போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து கைதட்டி வரவேற்றனர். இதேபோல சிவஞானம் சிறிதரன் உரையாற்றும் போது தலைவர் பிரபாகரன் என உச்சரித்த போதும் கைதட்டல் வானைப் பிளந்தது.

அதேவேளை, நேற்று கூட்டம் நடைபெற்ற போது, மக்களோடு மக்களாக நின்று ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை அவதானித்துக் கொண்டு நின்றனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரை உச்சரித்த போது மக்கள் மத்தியில் எழுந்த கரகோஷத்தையும் ஆர்ப்பரிப்பையும் பார்த்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் புன்முறுவல் பூத்ததுடம், அதனை தமது குறிப்பேட்டில் குறிப்பெடுத்ததையும் அவதானிக்க முடிந்தது.

Related Posts