Ad Widget

மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

மதுவுக்கு எதிரான பாரிய பிரசாரத்தை ‘ஹெல்தி லங்கா’ அமைப்பு யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் கடந்த வாரம் சண்டிலிப்பாய், சங்கானை, காரைநகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசார நடவடிக்கைகளில் மதுவால் ஏற்படும் பாதிப்புக்கள், மதுவால் ஏற்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் குழுக்களுக்கு மதுவைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தல்களும் இதன் போது வழங்கப்பட்டது.

Related Posts