Ad Widget

மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக அந்தோனியர் சிலை

நெல்லியடி நகர்ப்பகுதியில் மதுபான நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, வியாழக்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், அந்தோனியாரின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்றித் தருமாறு தவிசாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சிலையை தனியார் ஒருவர் தனது நிதியில் தனக்குச் சொந்தமான காணியின் முன்பக்கத்தில் அமைத்துள்ளார். அமைக்கப்பட்ட சிலை வியாழக்கிழமை (11) திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Posts