Ad Widget

முதலமைச்சருக்கும் உறுப்பினருக்கும் எனது மனமுவந்த ஓத்துழைப்பு எப்போதும் இருக்கும்- அங்கஜன்

angajanஇன்று வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றமையைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவ் வாழ்த்துச் செய்தியில் வட மாகாண சபையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்களினதும் உங்கள் உறுப்பினர்களது மக்கள் நலன் சார் நடவடிக்கை அனைத்திற்கும் எனது மனமுவந்த ஓத்துழைப்பு எப்போதும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டடுள்ளதாவது

இலங்கை வடக்கு மாகாணத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், மாண்பிமிகு ஜனாதிபதி முன்னிலையில் முதல்-மந்திரியாக பதவிப் பிராமணம் பொறுப்பேற்று உள்ள முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஷ்வரன் ஜயா அவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தமும் அதன் முடிவும் மிகவும் கசப்பானவை அவ் அனுபவங்களிலிருந்து மீண்டும் ஒர் அவல வாழ்வுக்கு இட்டுச் செல்லாத முதற் படியை நீங்கள் எடுத்து வைத்துள்ளீர்கள். இனங்களிற்கிடையிலான ஜக்கியத்தையும், இலங்கை அரசியல் சாசனத்தையும் கட்டிக்காப்பதற்கு ஏற்றவாறு நீங்கள் நடந்து கொண்ட விதம் உங்கள் அரசியல் புலமையை சுட்டி காட்டி நிற்கின்றது. எம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு மத்திய அரசோடு ஒத்திசைவான செயற்பாடுகளை முன்னேடுத்து சிறப்பான நம்பிக்கையுடன் கூடிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதே யதார்த்தம் என்பதை உங்கள் நடவடிக்கை மூலம் காண்பித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதே.

வட மாகாண சபையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்களினதும் உங்கள் உறுப்பினர்களது மக்கள் நலன் சார் நடவடிக்கை அனைத்திற்கும் எனது மனமுவந்த ஓத்துழைப்பு எப்போதும் இருக்கும். இந்த மாகாண சபை மக்கள் நடவடிக்கைக்கான ஒர் உந்து சக்தியாக செயற்ப்படும் என மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். தொடர்ந்தும் மத்திய அரசுடனான புரிந்துணரக்கூடிய உறவை பேணி மக்கள் நலம் வென்ற மாகாணமாக எமது மாகாணத்தை கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. என்று கூறிக் கொள்கின்றேன்.

இவ்வாறு அங்கஜன் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Related Posts