Ad Widget

மகிந்தவுக்கு ஆதரவளிக்க வெளிநாட்டில் பணிபுரியும் 1,37,000 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

குவைத்தில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடும் இலங்கையர்களை ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தேர்தலுக்கு முன்னர் நாட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குவைத்தில் பணிபுரியும் 1,37,000 இலங்கையர்கள் ஜனவரி 07 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இலங்கையர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நிகழ்ந்தது. தற்போது நிலைமை சீராகி உள்ளது. இதற்கு மூலகாரணம் மகிந்த ராஜபக்சவின் நிர்வாகமே என்பது சம்மேளனத்தின் கருத்தாகும்.

இதேவேளை ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஏனைய வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் தற்போது தயாராகி இருப்பதாக சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts