Ad Widget

போலி தங்கம் விற்க முயன்ற நால்வர் யாழில் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நாவற்குழி பிரதேசத்தில் மக்களை ஏமாற்றி போலி தங்கத்தை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்தே அந்த நால்வரையும் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து கப் ரக வாகனம், பித்தளை செம்பு ஒன்று, இரண்டு கிலோ 800 கிராம் நிறையில் போலியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்த தங்க பொத்தான்கள் மற்றும் 3 கிலோ 230 கிராம் நிறைகொணட் ஈயம் உருண்டைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts