Ad Widget

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச விசாரணையாளர்களை கொண்டுவருவோம் : சுமந்திரன் உறுதி!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றதெனவும், நாங்கள் சர்வதேச விசாரணையாளர்களையே கொண்டுவரவுள்ளோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று (சனிக்கிழமை) முல்லைத்தீவில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், நாங்கள் சர்வதேச நீதிபதிகள் தொடர்பாகக் கதைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், அது தொடர்பாக இப்போது கதைத்து வரவிருக்கும் சர்வதேச விசாரணையாளர்களை இல்லாமல் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச விசாரணையாளர்களை அழைத்தே போர்க்குற்ற விசாரணை நடைபெறும் எனவும் அம்மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளார்.

Related Posts