Ad Widget

போர்குற்றம் புரிந்தவர்களின் பெயர்களை வெளியிடவுள்ளது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

t-g-of-tamil-eelllamபோர்குற்றம் இனஅழிப்பு புரிந்த அரசியல் தலைவர்கள் இராணுவ தளபதிகள் உள்ளடக்கம் !

இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள் , இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுமான மையத்தினால் வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட 1373ம் இலக்க பிரேரணையின் தீர்மானத்தின் விதிகளுக்கு புறம்பாக, ஒர் இனத்தின் மீது திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இச்செயலில் ஈடுபட்பட்ட சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கவுள்ளது.

இதேவேளை அனைத்துலக சட்டங்களுக்கு போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட குறித்த இந்த நபர்களது பெயர்விபரங்களை, அனைத்துலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதோடு, அவர்களது சொத்துக்களை முடக்குவதற்குமாறு கோருவதோடு, பயணத்தடைகளையும் இடுமாறும் அந்நாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோர இருக்கின்றது.

மரணித்தவர்களும் இலங்கை வரத்தடை!!

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய 424 நபர்கள் என்றொரு அறிவித்தலை கடந்த மார்ச் மாதம் 21 ம் திகதி வர்த்தமானியில் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது. நபர்களின் முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் கடவுச்சீட்டு இலக்கம் என்பவையும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த பட்டியலின் 11 ம் பக்கத்தில் குறித்ததொரு நபர் குறித்த விபரங்களுள்ளன: கருணாநிதி துரைரத்தினம் அல்லது துரை, தொ.பே. இல :-0664656395, கடவுச் சீட்டு இல :F 750320938 ,பிறந்த திகதி:-05.03.1969, விலாசம் (இலங்கை) :வட்டு மேற்கு, வட்டுக்கோட்டை. விலாசம் (வெளிநாடு) :- 14, ரூ மயுரைஸ் பியுரோ, 93000 – பொபினி.பட்டியலிடப்பட்ட திகதி: 2014 பெப்புரவரி 25. ஆனால் மேலே பெயர் குறிப்படப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி மரணமடைந்துள்ளார் என்பதும். அவரது மரண அறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் உலாவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி

424 பேர் இலங்கைக்குள் நுழையத் தடை

Related Posts