Ad Widget

போரில் உயிரிழந்தவர்களை நினைகூறும் நாள் குறித்து ஆராய்வு

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஒரு பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள லோர்ட் நசெபி தெரிவித்தார்.

Lord naseby

யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (02) விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிலையில், புன்னாலைக்கட்டுவானிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் திங்கட்கிழமை (02) மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்த பொதுமக்கள் விடுதலைப்புலி உறுப்பினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரை நினைவுகூறும் முகமாக ஒரு நாளை தெரிவு செய்து அந்த நாளை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க சாத்தியங்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறானதொரு நாளை அனுஷ்டிக்கும் நிலை நிச்சயமாக உருவாக வேண்டும். அந்நாளே சமாதானத்துக்கான நாளாக இருக்கும்’ என்றார்.

‘பொதுமக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தேன். இராணுவத்துக்கு தேவையான இடத்தை தவிர ஏனைய இடங்களை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்கள். எனவே அதுவும் மிகவிரைவில் சாத்தியம் ஆகும் நிலை உண்டு.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதேவேளை புலம்பெயர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

Related Posts