Ad Widget

போராட்டத்தை நிறுத்த பொலிஸாரால் மனு: நீதிபதி நிராகரிப்பு

judgement_court_pinaiயாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக யாழ். பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பே. சிவகுமாரனால் நிராகரிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு நல்லூர் பகுதியில் இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு அனுமதி கோரி பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி போராட்டத்தின் நிலைமையினை சட்டத்தரணி வி.கி. சிவலிங்கம் நீதிமன்றுக்கு எடுத்துரைத்தார்.

மக்கள் தங்களின் பிரச்சனைகளை வெளிக்கொணரும் வகையிலேயே இவ்வாறான போராட்டத்தினை மேற்கொள்கின்றனரே தவிர வேறு எந்தவொரு செயற்பாடுகளையும் குழப்புவதற்காக அல்ல என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நீதிபதியினால் மேற்படி மனு நிராகரிக்கப்பட்டது.

Related Posts