Ad Widget

பொலிஸ் ஜீப் வண்டி மோதி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் திங்கட்கிழமை (18) தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தருணாரட்ணம் கிரிதரன் (வயது 26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்தார்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்படி உத்தியோகத்தர் மீதே பொலிஸ் வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts