Ad Widget

பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சைக்கிள் ரோந்து சேவையை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும்,போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவற்றுடன் முக்கியமாக வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு மற்றும் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்பவர்கள் கண்காணிக்கவும் குறித்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான பொலிஸாரின் சைக்கிள் ரோந்து சேவை மக்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாணவர்கள் தமது கல்வியை இடையூறு இல்லாமல் தொடர்வதற்கு வழிவகுக்கும் எனவும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார்.

Related Posts