Ad Widget

பொலிஸாரை தகாத வார்த்தையால் திட்டிய இளைஞர் கைது

பொலிஸாரை தகாத வார்த்தையால் பேசிய இளைஞரை யாழ். பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கைதுசெய்யப்பட்ட இளைஞர் நேற்று (திங்கட்கிழமை) யாழ். பஸ்தியன் சந்திப்பகுதியில் இளைஞர்களுடன் நின்றுள்ளார்.

அப்போது, சிங்கள மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த இடத்தில் நின்ற போது, குறித்த இளைஞர் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தமிழ் மொழி தெரியாதென நினைத்து தகாத வார்த்தையால் அவரைப் பேசியுள்ளார்.

அவர் பேசிய தகாத வார்த்தை என்னவென புரிந்துகொண்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதுடன், குறித்த இளைஞரை கைதுசெய்து யாழ். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பொலிஸார் குறித்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றதுடன், குறித்த இளைஞரை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts