Ad Widget

பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற போதிலும், இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரமும் நிறைவு பெறாத நிலையில் பொலிஸாரின் முறையற்ற நடத்தைகள் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் ஆணைக்குழு பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts