Ad Widget

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (23) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றை வீதியில் கடமையில் இருந்த நெல்லியடி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

அவ்விடத்துக்கு வந்த பிறிதொரு நபர் தனக்கு நெல்லியடி பொறுப்பதிகாரியை தெரியும் என்றுகூறி, டிப்பர் சாரதியிடம் ஒரு தொகைப்பணத்தைப் பெற்று, மடக்கிப் பிடித்த போக்குவரத்துப் பொலிஸாரிடம் கொடுக்க முற்பட்டுள்ளார். பணத்தை கொடுக்க முற்பட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸாரை கடமையைச் செய்யவிடாது தடுத்தமை மற்றும் இலஞ்சம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Related Posts