யாழ் குடாநாட்டில் நிலவும் சூழல் தொடர்பில் பொய் பிரச்சாரங்களை வௌியிடுபவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
யாழில் எந்தவொரு வகையிலும் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டில் உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் ரவி வைத்தியலங்கார கூறியுள்ளார்.