Ad Widget

பொன் அணிகள் போர் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

judgement_court_pinaiஅமலன் கொலை வழக்குச் சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கொலையை நேரில் பார்த்த சாட்சி ஒருவரது சாட்சியமும் மன்றில் நேரடியாகப் பதிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் சந்தேகநபர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவனான அமலன் (வயது 23) கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மைதானத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts