Ad Widget

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ஊர்திப் பவனி யாழிலிலிருந்து ஆரம்பம்

பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதை வரவேற்கும் முகமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

DSC_0146(2)

தேசிய தொலைக்காட்சியொன்றின் அனுசரணையில் யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து சர்வமத ஆசீர்வாதத்துடன் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த ஊர்திப் பவனி எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், சர்வமத குருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts