இன்று மாலை சனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய சனாதிபதி விலாடிமிர் புடின் அவர்கள் பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியைப் பெற்றமைக்காக அவரைப் பாராட்டினார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு நல்லுறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்த ரஷ்யா சனாதிபதிக்கு இலங்கையின் விருப்பமும் அதுவென சனாதிபதி ராஜபக்ச தெரிவித்தார்.
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு 2013, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) நிறைவு பெற்றது. பொதுநலவாயத்திற்கு உபசரணையளித்த நாட்டின் தலைவர் என்ற வகையில் சனாதிபதி மகிந்த அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமை பதவியை வகிப்பார். அபிவிருத்தியை உள்ளடக்கிய சமத்துவத்துடனான வளர்ச்சி என்பது இவ்வாண்டின் பொதுநலவாய மாநாட்டின் தொனிப்பொருளாக இருந்தது.
அடுத்த பொதுநலவாய மாநாடு 2015ல் மோல்ட்டாவில் நடைபெறும்.
பொதுநலவாய மாநாடு 2013 பற்றிய மேலதிக தகவல்களையும் அது தொடர்பிலான நிகழ்ச்சிகளையும் www.chogm2013.lk என்ற பொதுநலவாய உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும்.