Ad Widget

பெண்ணுடன் பாலியல் சேட்டைவிட்ட இருவர் கைது

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35, 39 வயதான ஆசாமிகள் என்பதும், கைது செய்யப்படும் போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மதுபோதையில் கஞ்சா நுகர்ந்துவிட்டு நின்ற இருவரும் கடைக்கு சென்றுவிட்டு தனிமையில் சென்ற பெண் மீது பாலியல் துன்புறுத்தல் விடுத்துள்ளனர்.

அந்தப்பெண் கத்தி கூக்குரல் இடவே, அந்தப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசிய பொலிசார் இருவரையும் கையும்மெய்யுமாக பிடித்துள்ளனர்.

Related Posts