Ad Widget

பெண்களுடன் சேஷ்டை,வீதியில் கூடி நின்றமை குற்றச்சாட்டுக்களில் 12 பேர் கைது!!

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை, உடுவில் ஆகிய பகுதிகளில் பெண்களுடன் சேஷ்டை, வீதியில் கூடி நின்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் நேற்று முன்தினம் சனிக்கிழமை 12 பேரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டு மற்றும் குழுமோதலில் ஈடுபடுபவர்கள், பொது சமாதானத்திற்குக் குழப்பம் விளைவிப்பவர்களைக் கைது செய்து பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கடந்த வாரம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கமைய சுன்னாகம் பொலிஸார் தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாகவே திடீர் ரோந்துப் பணியை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டதுடன் மல்லாகம் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts