Ad Widget

பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த இருவருக்கு விளக்கமறியல்

நெல்லியடி பஸ் நிலையத்தில் பெண்களுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.

பஸ்ஸூக்காக காத்திருக்கும் பெண்களுக்கு அநாகரீகமான சைகள் காட்டியும் கடதாசியில் தங்கள் அலைபேசி இலக்கங்களை எழுதி பெண்களுக்குக் கொடுக்க முனைந்த இரண்டு சந்தேகநபர்களையும் சிவில் உடையில் பஸ் நிலையத்தில் நின்ற பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, அவர்களை எச்சரிக்கை செய்த நீதவான், விளக்கமறியலில் வைத்தார்.

அத்துடன், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts