Ad Widget

புலிகளின் கழுத்துப்பட்டி அணிந்திருந்தவர் கைது

தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தந்த தகவலின் அடிப்படையில் விளையாட்டு அதிகாரியை தாம் கைது செய்ததாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி சென்றுள்ளார்.

இதன்போது, அவர் அணிந்திருந்த கழுத்துப்பட்டியில் ‘விளையாட்டு பேரவை தமிழீழம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதனை, அங்கு நின்ற சிலர் பார்வையிட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, விளையாட்டு அதிகாரியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருவதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் கூறினார்கள்.

Related Posts