புலம்பெயர் தமிழர் நிதிப் பங்களிப்புடன் வலி. வடக்கில் மாதிரிக் கிராமம்

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்புடன் மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதில் 100 வீடுகள் புதிதாக நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாக, வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

வலி.வடக்கில் மக்கள் மீள்குடியமர்வதற்கு அண்மையில் ஒரு தொகுதி நிலப் பரப்பு விடுவிக்கப்பட்டது. இருப்பி னும், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் மீள்குடிய மர்வுக்குரிய அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

இதனால் வலி. வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்கள் தொடர் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உதவி செய்வதற்குப் புலம்பெயர் தமிழர்கள் முன்வந்துள்ளனர்.

அவர்களின் நிதிப் பங்களிப்பில், மீள்குடியமர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

வறுத்தலைவிளான் மற்றும் பளைவீமன்காமம் தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி, 100 வீடுகள் புதிதாக நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன், அந்தப் பிரதேசத்தில் மாதிரிக் கிராமத்துக்குரிய முழுமையான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இதற்காக, குறித்த கிராமங்களின் தேவைகளை ஆராயும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வாரமளவில் அந்த நடவடிக்கைகள் பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர், அந்த மக்களுக்கான வீட்டுத் திட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தவிசாளர் சோ.சுகிர்தன் குறிப்பிட்டார்.

Related Posts