Ad Widget

புலம்பெயர்ந்த, உயிரிழந்த வாக்காளர் விவரம் திரட்டல்

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, உயிரிழந்துள்ள வாக்காளர்களின் விவரங்கள் கிராம சேவையாளர் ஊடாக தேர்தல்கள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்கள் திரட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலின்போது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளது.

புலம்பெயர்ந்த வாக்காளர் பெயர்ப் பட்டியல், 2014 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரை மேற்கொண்ட பதிவுகளுக்கு அமைய, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதி உறுதிப்பட்டது.

அதன் பின்னரான காலப் பகுதியில் யாராவது உயிரிழந்திருப்பின் அல்லது வெளிநாடு சென்றிருப்பின் அது தொடர்பில், அவர்களது பெயர்கள் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்காது.

இதன் காரண மாகவே குறித்த தகவல்கள் கிராம சேவையாளர்கள் ஊடாகத் தேர்தல்கள் திணைக்களம் திரட்டி வரு வதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

Related Posts