Ad Widget

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் சமூகத்துடன் இணைப்பு!

வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் நேற்று சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த தேவராஜா ஜெகதீபன் மட்டக்களப்பு, றங்கசாமி நந்தகுமார் மட்டக்களப்பு, யோசப் டின்டாஸ் விவிலியன் மட்டக்களப்பு, கணேசன் துசாந்தன் மட்டக்களப்பு ஆகிய நான்கு பேரே தமது குடும்பத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் காவல் நிலைய பொறுப்பதிகாரி சமயத் தலைவர், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், காவல்துறையினர், விமானப்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts