Ad Widget

புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடிமருந்தே சாவகச்சேரியில் தீப்பற்றியதாம்!

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது குண்டுவெடிப்பல்ல என்றும் புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடி மருந்தே சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

chavakachcherey-bomb

வீட்டின் அருகில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் புதைத்துவைக்கப்பட்டிக்கலாம் எனக் கருதப்படும் கொட் 8 எனப்படும் வெடி மருந்தே திடீரென தீப்பற்றி எரிந்தது எனவும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை தேடுதல் நடத்தியபோது 5 பைகளில் புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Posts