Ad Widget

புதிய தேர்தல் விதிகளால் யாழ்ப்பாணத்தின் தொகுதிகள் 6 ஆக குறையும் அபாயம்!

புதிய தேர்தல் விதிகளின் பிரகாரம் யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் உள்ள 196 தேர்தல் தொகுதிகளில் 35 தேர்தல் தொகுதிகள் ஒரே சமயத்தில் குறைக்கப்படுவதனாலேயே இந்த நிலை உருவாகும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய விதிகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை 225 ஆகப் பேணி தேர்தல் தொகுதிகளை 125 ஆகக் குறைக்க முடிவு செய்யப்படவுள்ளது.

இதனால் சிறிய, சிறுபான்மை கட்சிகளே பாதிக்கப்படும் என்றும் மேலும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 235 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

Related Posts