Ad Widget

பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஷாங்க் மனோகர்

ஜக்மோகன் டால்மியா மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் பி.சி.சி.ஐ. தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு செய்யப்பட்டார்.

Shashank-Manohar

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த ஆண்டு அக்டோபரில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூடி, சஷாங்க் மனோகரை தலைவராக நியமித்தது.

இந்நிலையில், சஷாங்க் மனோகர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.யிலும், தலைவர் பதவி வகித்து வருகிறார்.

விதிமுறைப்படி ஐ.சி.சி. தலைவராக இருப்பவர் வேறு பதவிகள் வகிக்க கூடாது என்பதால் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Related Posts