தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் அறிவித்த யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் கோயில் வளாக மேடையில் வைத்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன், 1987ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியே மேற்கண்ட அறிவிப்பை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஜனநாயக போராளிகள் கட்சியும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வைத்தே வெளியிட்டதாக அக்கட்சியின் இணைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான என்.வித்தியாதரன் தெரிவித்தார்.