Ad Widget

பிரபல யாழ்.நகரப் பாடசாலை மாணவர் கஞ்சா பாக்குடன் கைது!

யாழ். ஓட்டுமடப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த பாடசாலை மாணவன், ஒருவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மாணவன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விகற்பவர் என பொலிஸார் கூறினர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓட்டு மடப் பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகநபரான மாணவனை கைதுசெய்ததுடன் 50 கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவாவினை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், விற்பனை முகவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts