கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர செயற்பட்டார். இந்த நிலையிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
இடமாற்றம் பெற்றுச்செல்லும் இவருக்கான விசேட அணிவகுப்பு மரியாதை மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்கா சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.