Ad Widget

பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பிற்கு அமெரிக்க தூதுவர் வரவேற்பு!!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட குறித்த அறிவிப்பை மேற்கோளிட்டு அலைனா டெப்லிட்ஸ் டுவிட்டரில் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும் மத சடங்கு முறைகளுக்கும் மதிப்பளிப்பது சாதகமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts